பொழுதுபோக்கு

மீண்டும் மீண்டும் பாலகிருஷ்ணாவுடன் இணையும் நயன்தாரா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர் சிரஞ்சீவி நடிக்கும் ‘Mana Shankara Vara Prasad Garuபடத்தில் நயன்தாரா நடிக்கின்றார்.

பாலகிருஷ்ணா தற்போது ‘அகண்டா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.

அகண்டா 2படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார்.

வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்கும் 4-வது படமாக இது இருக்கும். முன்னதாகசிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹாமற்றும்ஸ்ரீ ராம ராஜ்ஜியம்ஆகிய படங்களில் பாலகிருஷ்ணாவும் நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்