பொழுதுபோக்கு

நல்ல கதாபாத்திரத்திற்காக காத்து கொண்டிருக்கிறேன்-நடிகை மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நட்சத்திரமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர்.மராத்தி மொழியில் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர்,பின் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது சீதா ராமம். கடந்த 2022ல் வெளிவந்த சீதா ராமம் படத்தில், மிருணாள் தாகூர் ஏற்று நடித்த நூர்ஜகான் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

இதன்பின், நானியுடன் இணைந்து Hi nana படத்தில் நடித்தார். இப்படமும் மிருணாள் தாகூருக்கு வெற்றியை தேடி தந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.

இவர் நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் மிருணாள் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில்,”ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள். அதனால் நான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். முழுவதுமாக ஒரு படத்தில் கவனம் செலுத்தாமல் பல படங்களில் கையெலுத்திடுபவள் நான் இல்லை. அதனால் நல்ல கதாபாத்திரத்திற்காக காத்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்