உலகம்

லிபியாவில் கப்பல் விபத்து: அறுபத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

உயிர் பிழைத்த 25 பேர் லிபியாவில் உள்ள தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, மத்திய மத்தியதரைக் கடல் உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!