ஆசியா

மரணதண்டனை விதிக்கப்பட்ட வியட்னாமிய பெருஞ்செல்வந்தர் மீது மேலும் பல மோசடிக் குற்றச்சாட்டுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட வியட்னாமியப் பெருஞ்செல்வந்தர் மீது மேலும் பல மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட இருக்கின்றன.இந்தத் தகவலை வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் செப்டம்பர் 6ஆம் திகதியன்று தெரிவித்தது.

மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகியவை தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வியட்னாமில் உள்ள பிரதான சொத்து மேம்பாட்டு நிறுவனமான வேன் தின் ஃபாட்டின் தலைவரான டுரோங் மை லானுக்கு ஏற்கெனவே மரணதண்டனை விதிக்கப்பட்டுவிட்டது,

27 பில்லியன் அமெரிக்க டொலர் (S$35 பில்லியன்) மதிக்கத்தக்க மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.இது வியட்னாமில் பதிவாகியுள்ள ஆக மோசமான ஊழல் குற்றங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செப்டம்பர் 19ஆம் திகதியிலிருந்து லானுக்கு எதிராகவும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 33 பேருக்கு எதிராகவும் வழக்கு விசாரணை நடத்தப்படும்.இந்த வழக்கில் ஏறத்தாழ 360,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!