ஐரோப்பிய நாடுகளில் நூதனமாக இடம்பெறும் பணமோசடி – மக்களின் கவனத்திற்கு!
ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது.
2024 மற்றும் 2025 க்கு இடையில் இந்த மோசடிகளின் வழக்குகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எழுமாறாக ஆண்கள் £2,600 பவுண்ட்ஸ் இழந்தால் பெண்கள் £4,100 பவுண்ட்ஸ் வரை இழக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், தனிமையில் வாழ்பவர்களும் இவ்வாறான சம்பவங்களால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேஷன்வைடின் பொருளாதாரக் குற்றத் தலைவரான ஜிம் வின்டர்ஸ், இந்தப் போக்கு “கலப்பு காதல் முதலீட்டு மோசடி”யின் பரந்த அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.





