”நவீன கால வதை முகாம்” : ICE பிடியில் இருந்த ஐரிஷ் பிரஜை கருத்து!
அமெரிக்காவில் ICE முகவர்களால் 04 மாதம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐரிஸ் நபர் ஒருவர் அந்நாட்டின் குடியேற்ற அமலாக்கத்தின் நிலைமைகளை நவீன கால வதை முகாம் என விவரித்துள்ளார்.
செப்டம்பர் 9, 2025 அன்று பாஸ்டனில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட கல்லெட்டன் (Culleton) என்ற நபர், வெளிப்புற அணுகல் மற்றும் உணவு குறைவாக உள்ள அறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அங்கு வாழ்க்கை தரம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், உயிருக்கு பயந்து வாழும் சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்லெட்டன் இரண்டு தசாப்த காலமாக அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், அமெரிக்க பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கை அறிந்திருப்பதாகவும், தூதரக உதவியை வழங்கி வருவதாகவும் அயர்லாந்தின் வெளியுறவுத் துறை குறிப்பிட்டுள்ளது.





