ட்ரம்ப் அனுமதியுடன் மினசோட்டாவில் குடியேற்ற கண்காணிப்பு தீவிரம்
மினசோட்டாவில் குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் அதிகரிக்கப்படும் என அமெரிக்க எல்லைப் பேரவைத் தலைவர் டாம் ஹோமன் தெரிவித்துள்ளார்.
இதற்காக அமெஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
“இந்த நடவடிக்கையின் மேற்பார்வை மற்றும் வெற்றியை உறுதி செய்ய நான் மினசோட்டாவில் சிறிது காலம் தங்குவேன்.
உள்ளூர் அதிகாரிகள் கூட்டாட்சி குடியேற்ற அதிகாரிகளுடன் அதிக ஒத்துழைப்பு செய்ததால், தற்போது சரணாலயம் இல்லாத மாநிலமாக மினசோட்டா மாறிவிட்டது.” என்றார். இதுவரை, கடந்த மாதம் இரண்டு அமெரிக்க குடிமக்கள் கூட்டாட்சி முகவர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர், மாநிலத்திற்கு 2,000 க்கும் மேற்பட்ட குடியேற்ற அதிகாரிகள் சமீபத்தில் அனுப்பப்பட்டனர்.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.




