உலகம்

கனடாவில் சமூக ஊடகங்களில் செய்திகளை தடை செய்ய META முடிவு

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக்கை நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களும் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் பெற மாட்டார்கள்” என்று கூறியுள்ளது.

டிஜிட்டல் செய்திகளின் எழுச்சிக்குப் பின்னர், கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் நூற்றுக்கணக்கான செய்தி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன; பலர் வேலை இழந்துள்ளனர். போராடி வரும் கனேடிய பத்திரிகைகளுக்கு ஆதரவளிக்க கனடா அரசு முடிவு செய்து ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, கனடா டிஜிட்டல் துறையின் ஜாம்பவான்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஜாம்பவான்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு “அவுட்லெட்”களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்டா நிறுவனம் அந்த செய்திகளை தடை செய்யும் முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் இதே போன்ற முடிவை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!