சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஆபத்து – மூவர் பாதிப்பு

சிங்கப்பூரில் மூவருக்கு Zika வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்
அவர்கள் Kovan வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும். பாதிக்கப்பட்ட மூவரில் இருவர் வீட்டிலேயே குணமடைந்து வருகின்றனர்.
எஞ்சிய ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. தொற்றுக்கு ஆளான மூவரில் எவருமே கர்ப்பிணி அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
கோவன் வட்டாரத்தில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்வோரிடம் ஸீக்கா பரிசோதனை செய்யும்படிச் சுகாதார அமைச்சு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் அறிகுறி ஏதும் தென்படவில்லை அல்லது இலேசான அறிகுறியே காணப்பட்டது.
ஸீக்கா வைரஸ் மேலும் பரவ வாய்ப்புள்ளதா என்பது குறித்து இப்போதே சொல்ல இயலாது என்று அதிகாரிகள் கூறினர்.