இலங்கை

மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் தட்டம்மை! சிறப்பு தடுப்பூசி தொடர்பில் வெளியான அறிவிப்பு

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக பிரகடனப்படுத்திய போதிலும், 2023 ஆம் ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது,

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வெளியீட்டின்படி நவம்பர் 4 முதல் 9 வரை சிறப்பு தடுப்பூசி வாரமாக அறிவிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

புதிதாக வெளிப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் 20-30 வயதுக்குட்பட்டவர்களில் பதிவாகியுள்ளன. இந்த நோய் குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியும், ஒன்பது மாதங்கள் முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியும் போடப்படும்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!