ஆசியா

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய போராட்டம் : பலஸ்தீனக் கொடியை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய மக்கள்!

பங்களாதேஷில் பாரிய போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல், லெபனான் மற்றும் காசா பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் டாக்காவில் போராட்டம் நடைபெற்றது.

இஸ்லாமிய அந்தோலன் பங்களாதேஷ் இஸ்லாமிய அரசியல் கட்சி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.

பலஸ்தீனக் கொடியை ஏந்தியவாறும், போருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

முஸ்லிம் சமூகம் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!