பொழுதுபோக்கு

சின்மயி Vs தீ…. தேவையற்ற சர்ச்சை எதற்கு? மணிரத்னம் கோபம்?

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்பட்டது.

படத்தில் பிரபல பாடகியான தீ பாடிய ‘முத்த மழை’ என்ற பாடலை சின்மயி பாடினார்.

அன்றைய தினம் பாடகி தீ வர முடியாத காரணத்தால் சின்மயியைப் பாட வைத்துள்ளார்கள். அப்பாடலை தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சின்மயி தான் பாடியுள்ளார்.

இசை வெளியீட்டின் போது மேடை நிகழ்ச்சியில் சின்மயி பாடிய பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அவர் பாடியதும் நன்றாக இருக்கிறது, அவரையே பாட வைத்திருக்கலாமே என்ற ரீதியில் கமெண்ட்கள் வந்தது.

தமிழில் ஒரிஜனலாகப் பாடிய தீ-யை குறைத்து மதிப்பிடுவது போலவும் ஒப்பிட்ட பல கமெண்ட்கள் வந்தன. தமிழில் பாடலைப் பாடுவதற்கு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது.

இந்நிலையில் இப்படி ஒரு சர்ச்சை தேவையற்று உருவாக்கப்படுவதாக மணிரத்னம் கோபப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே, கர்நாடகாவில் கமல் பேசிய பேச்சால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சர்ச்சையையும் எதற்கு என அவர் கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்