ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் சுறாமீனால் நபருக்கு நேர்ந்த கதி

அவுஸ்திரேலியாவில் சுறாமீன் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் உலாவலில் ஈடுபட்டிருந்த 44 வயது நபர் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார்.

நபர் சுமார் 30 வினாடிகள் சுறா மீனிடம் இருந்து தப்பிக்க போராடியதாகவும், காயங்கள் காரணமாக அவர் சிரமத்துடன் கரைக்கு நீந்தியதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் மார்ட்டின் பர்க் கூறுகையில், காயமடைந்த நபரின் கீழ் காலில் காயங்கள் தீவிரமாக இருப்பதாகவும் அதிக இரத்தப்போக்கு காரணமாக அவரது உயிரைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!