பொழுதுபோக்கு

சஞ்சய்யின் பிறந்தநாளுக்கு லைகா நிறுவனம் கொடுத்த சர்ப்பிரைஸ்.. என்னன்னு பாருங்க..

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் விஜய்.

இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தனது தந்தையை போலவே சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

சினிமா மேக்கிங், டைக்ரஷன் குறித்து படிப்பை வெளிநாட்டில் பயின்றுள்ள ஜேசன், Pull The Trigger என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

விஜய் சேதுபதி, துருவ் விக்ரம், கவின், சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களிடம் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இந்த படத்தை பலரும் ரிஜெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது ஜேசன் தனது படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும் பணியில் இருப்பதாகவும் விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் இயக்க உள்ள படத்தின் நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள், உங்கள் பாதையில் வெற்றிகளும் சாதனைகளும் தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content