பொழுதுபோக்கு

புதிய அவதாரம் எடுக்கின்றார் லோகேஷ்… அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் தலைவர் ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், திடீரென நடிகர் அவதாரம் லோகேஷ் எடுத்திருந்தார்.

அதாவது ஸ்ருதிஹாசன் உடன் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். பெரும்பாலும் டைரக்டர்கள் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் மிஸ்கின் வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார். அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனனும் டைரக்ஷனை காட்டிலும் இப்போது படங்களில் நடிக்க தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷின் லியோ படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார்.

இப்போது கௌதம் மேனனை ஓரம்கட்ட முரட்டு வில்லனாக களம் இறங்குகிறார் லோகேஷ். அதாவது இயக்குனர் சுதா கொங்கரா தனது கனவு படமான புறநானூறு படத்தை எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஸ்ரீலிலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நிறைவடைந்து உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக லோகேஷ் தான் கமிட்டாகி இருக்கிறார்.

லோகேஷ் இயக்குனராக பணியாற்றிய படங்களிலேயே வில்லன் கதாபாத்திரம் படு பயங்கரமாக இருக்கும். அதுவும் லியோ படத்தை எல்லாம் சொல்லவே வேண்டாம். இப்படி இருக்கும் சூழலில் லோகேஷ் வில்லனாக இறங்குகிறார் என்றால் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!