இலங்கை செய்தி

8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார நெருக்கடி

14 மாத காலப்பகுதியில் மின்சார கட்டணம் 400 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதனுடன் ஒப்பிடும் போது அரச ஊழியர்களின் சம்பளம் எந்த காலத்திலும் அதிகரிக்கப்படவில்லை எனவும் அரச மாகாணங்கள் மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலையேற்றம் காரணமாக 8 இலட்சம் அரச ஊழியர்கள் பிழைப்பு நெருக்கடியில் உள்ளனர்.

இதேவேளை, களப்பணி, போக்குவரத்து செலவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, எரிபொருள் விலை மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாமைக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content