லண்டனில் ஒன்றுக்கூடும் 06 பால்கன் நாடுகளின் தலைவர்கள்!

06 பால்கன் (Balkan ) நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கவுள்ளனர்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக 2014 இல் தொடங்கப்பட்ட உச்சிமாநாடு லண்டனில் நடைபெறுகிறது.
2020 ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய போதிலும் வருடாந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது.
இதில் கலந்துகொள்வதற்காக அல்பேனியா (Albania), போஸ்னியா(Bosnia), கொசோவோ(Kosovo), மாண்டினீக்ரோ (Montenegro), வடக்கு மாசிடோனியா (North Macedonia) மற்றும் செர்பியா(Serbia) ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ஒரே ஒரு பால்கன் நாடு குரோஷியா (Croatia) ஆகும்.
இந்நிலையில் ரஷ்யாவின் தலையீடு, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பேச்சுவார்தைகளின்போது மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.