இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு – 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதி என தகவல்

தங்காலையில் நேற்று மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது.

அதில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தங்காலை பகுதியில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ‘உனாகுருவே சாந்த’ என்ற குற்றவாளியின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3 லொறிகளில் இருந்து நேற்று இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்