இலங்கை : காணி வழக்கு- மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்
போலி ஆவணங்களை பயன்படுத்தி அரச காணிகளை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் 2025 மே 05 வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த மார்ச் மாதம் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொட பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணி ஒன்றில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 28 times, 1 visits today)





