பொழுதுபோக்கு

விமான விபத்தால் “குபேரா” ட்ரைலர் வெளியீட்டு விழா ரத்து… குவியும் பாராட்டு

நேற்றைய தினம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் அகமதாபாத் விமான விபத்து தான். 242 பேருடன் நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்கும் உள்ளாகி நொறுங்கியது.

இதில் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது வருத்தத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதன் எதிரொலியாக குபேரா தயாரிப்பாளர் தனது பட விழாவை ரத்து செய்து இருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கிறது குபேரா படம்.

நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலை வருகின்ற ஜூன் 20ஆம் தேதி குபேரா தியேட்டரில் வெளியாக உள்ளது. இதற்கான தியேட்டர் வெளியீட்டு விழாவை நாளை ஜூன் 13 நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவிற்காக முக்கிய பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த விமான விபத்து காரணமாக தயாரிப்பாளர் குபேரா ட்ரைலர் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

மேலும் குபேரா டிரைலர் நேரடியாகவே ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த துயர சம்பவத்தால் தனது படத்தின் விழாவை தயாரிப்பாளர் ரத்து செய்யப்பட்டு இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமேசான் இந்த மாதமே குபேரா படத்தை வெளியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததால் படம் அவசரமாக வெளியாகுவதாக கூறப்பட்டது. கண்டிப்பாக தனுஷுக்கு குபேரா படத்திலிருந்து பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்