பொழுதுபோக்கு

சமூகத்தை குறிப்பிட்டு பேசி சிக்கலில் சிக்கிய நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இருப்பினும், படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது.

ராஷ்மிகா கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் அவருக்கு எதிராகவே மாறியுள்ளது.

அதில், ” எனக்கு முன் கொடவா சமூகத்தைச் சேர்ந்த யாரும் திரைப்படத் துறையில் நுழைந்ததில்லை. நான் தான் முதல் ஆள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவுக்கு முன் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக இருக்கும் பிரேமா, குல்ஷன் தேவையா, நிதி சுப்பையா உள்ளிட்ட சிலர் கொடவா சமூகத்தை சார்ந்தவர்கள்.

இதனால் ராஷ்மிகாவின் கருத்து கொடவா சமூகத்தை சேர்ந்தவர்களை கோபப்படுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!