விளையாட்டு

3வது டெஸ்டில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ராகுல் 2வது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை.

இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த வேளையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம் பெற்றிருந்தார்.

ஆனாலும், கே.எல்.ராகுல் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்தால் மட்டுமே விளையாடும் அணியில் இடம்பெறுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ