பொழுதுபோக்கு

விஜய் மகனுடன் படம்? அப்போ வந்த செய்தி எல்லாம் உண்மை தானா?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததை நடிகர் கவின் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய்யை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டார்.

ஆனால் தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என ஒரே போடாக போட்ட ஜேசன் சஞ்சய், தான் இயக்குனராக இருப்பதாக கூறினார். இதனால் அவரின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட விஜய்யும் அனுமதித்தார்.

அந்த வகையில் ஜேசன் சஞ்சய், கடந்தாண்டு முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார்,

ஆனால் அப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார், யார் என்பதை அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். விஜய் மகன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் அதுகுறித்த அடுத்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

ஆரம்பத்தில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. பின்னர் அந்தக் கதையை அவர் கவினிடம் சொன்னதாகவும் அவர் தான் அப்படத்தின் ஹீரோவாக நடிப்பார் என்றும் செய்திகள் உலா வந்தன.

இதனிடையே சமீபத்திய பேட்டியில் ஜேசன் சஞ்சய் படம் பற்றி கவின் பேசி இருந்தார்.

அதன்படி அவர் கூறுகையில், ஆமா ஜேசன் சஞ்சய் அவருடைய படத்துக்காக என்னை அணுகியது உண்மை தான். அது ஒரு ஃபிரெண்ட்லி மீட்டிங். அப்போது என்னுடைய கைவசம் உள்ள படங்கள் பற்றி கூறினேன். அதையடுத்து தாங்கள் கலந்துரையாடிவிட்டு வருவதாக சொன்னார்கள். ஆனால் அதன்பின்னர் அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான் பார்த்தவரை விஜய்யை போலவே அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் மிகவும் எளிமையானவராக இருந்தார்” என கவின் கூறினார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content