தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கரூர் விவகாரம் – புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய தீவிரம் காட்டும் பொலிஸார்!

கரூரில் விஜய்யின் தேர்தல் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு ஆளும் கட்சியை பலர் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்று முக்கிய புள்ளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய பொலிஸார் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை பொலிஸார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை  இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!