பொழுதுபோக்கு

கைதி 2-வில் சூர்யா கேரக்டர் இதுதான்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

கார்த்தியின் கைதி படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி – லோகேஷ் கனகராஜின் காம்போ மீண்டும் எப்போது இணையும்? குறிப்பாக கைதி 2 படம் எப்போது உருவாகும் என்றெல்லாம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால், லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தின் ஹிட்டுக்குப் பின் விஜயுடன் இணைந்து மாஸ்டர், லியோ ஆகிய 2 படங்களை இயக்கினார். அதேபோல், கார்த்தியும் ஜப்பான், மெய்யழகன் ஆகிய படங்களில் பிஸியாக இருந்ததால் இருவரும் மீண்டும் இணையும் இப்படம் தள்ளிப்போனது.

இந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் மீண்டும் கார்த்தியை வைத்து கைதி-2 படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதன்படி, கைதி- 2 படத்தின் ஷூட்டிங் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கும் எனவும், இதில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்த சூர்யா அதே கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படியென்றால் கைதியில் டில்லியாக நடித்த கார்த்திக்கு ரோலக்ஸ் சூர்யா வில்லனா என கேள்வி எழுந்துள்ளது.

See also  லப்பர் பந்து ஹிட் அடித்தாலும் நின்று ஓடும் GOAT... விஜய் காட்டும் மாஸ்

மேலும், கைதி-2 படத்தை தொடர்ந்து 50 நாட்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பிரீ புரடக்சன்ஸ் பணிகள் தற்போதே திட்டமிட்டு தொடங்கப்பட்டு நடந்து வருவதாகவும் அதனால் குறுகிய நாட்களில் இப்படத்தை முடித்து, திரைக்கு கொண்டு வரப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கைதி படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுதான் இப்படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கார்த்தி, லோகேஷ், நரேன், இவர்களுடன் ரோலக்ஸ் சூர்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே கைதி-2 படத்தில் இணைந்துள்ள நிலையில், இப்படம் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை எடுத்து, ரசிகர்களை மிரட்ட படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content