பொழுதுபோக்கு

“டில்லி விரைவில் திரும்ப வருவார்” லோகேஷ் மாஸ் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்திலேயே தமிழ்த் திரையுலகின் கவனத்தினை ஈர்த்த இயக்குநராக மாறினார். மாநகரம் படத்தின் கதை மற்றும் திரைக்கதை பலரது பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் இவர் இயக்கிய கைதி படம் இவரது சினிமா வாழ்க்கையின் திசையை மொத்தமாக மாற்றியது.

இந்நிலையில் கைதி படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்தி சாருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு சாருக்கும் நன்றி. சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடங்கியதற்கு முக்கிய காரணமே நீங்கள்தான்” எனவும், டில்லி விரைவில் திரும்ப வருவார்” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கைதி படத்தின் இரண்டாம் பாகத்தினைப் பொறுத்தவரையில் தனது சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கக்கூடிய அனைத்து கதாபாத்திரங்களும் இருக்கும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தன்னால் ரத்தம், போதைப்பொருள் இல்லாமல், படம் எடுக்க முடியாது என அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் தெரிவித்துள்ளார்.

See also  250 கோடி சொத்து... நடிகர் பாலாவுக்கு சிறப்பாக நடந்த மூன்றாவது திருமணம்

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content