பொழுதுபோக்கு

மாமியார் கிட்டயே டீல் பேசிய ஜெயம் ரவி.. விஜய் சேதுபதியிடம் ஓடிய இயக்குனர்

ஜெயம் ரவியின் கடைசி நான்கு படங்களை அவரது மாமியார் தான் தயாரித்துள்ளார். சுஜாதா விஜயகுமார் இவர் ஜெயம் ரவி மனைவியின் தாயார். சைரன், அடங்கமறு, பூமி,, வீராப்பு போன்ற படங்களை தயாரித்தவர் இவர்தான்.

ஜெயம் ரவிக்கு கடைசியாக வெளிவந்த படம் சைரன் . இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடாவிட்டாலும் தயாரிப்பாளர் தரப்புக்கு லாபம் என்று கூறப்படுகிறது. தற்சமயம் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் “காதலிக்க நேரமில்லை” படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் பல வெற்றி படங்களை கொடுத்தவர். பசங்க , நம்ம வீட்டு பிள்ளை கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவர் ஜெயம் ரவியை அணுகி ஒரு கதை சொல்லி இருக்கிறார். அதை அவர் மாமியார் தான் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக பாண்டிராஜ் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ்சும் வாங்கியுள்ளார்.

இந்த படம் 52 கோடி பட்ஜெட்டில் அவர் மாமியார்சுஜாதா விஜயகுமார் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஜெயம் ரவி, மாமியார் என்று கூட பாராமல் 25 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு எந்த படமும் ஓடவில்லை, எப்படி 25 கோடி கொடுக்க முடியும் என மாமியார் தரப்பு சண்டை போட்டு உள்ளது.

இயக்குனர் பாண்டிராஜிடம் படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுங்கள் என ஜெயம் ரவியின் மாமியார் கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் நான் வேறு ஹீரோவை பார்த்துக் கொள்கிறேன் என விஜய் சேதுபதியிடம் போய்விட்டார்.

இப்படி நல்ல இயக்குனர்களிடம் 25 கோடிகள் சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி. என்னதான் மாமியார் படமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேற என்ற நோக்கத்தில் இப்படி பேசியுள்ளது குடும்பத்திற்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content