பொழுதுபோக்கு

“எனக்கு அவருடன் நடிக்க ஆசை” ஜெயம் ரவிக்கு வந்த திடீர் ஆசை

நடிகர் ஜெயம் ரவி ஒரு சமத்தான ஹீரோ. ஆனால் அப்படிப்பட்ட இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக சர்ச்சை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

அதாவது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து தான் ஹாட் டாபிக்காக இணையத்தில் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜெயம் ரவி அவருடைய தனிப்பட்ட கருத்தை சமூக வலைதளங்களில் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் இப்போதைக்கு பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தலாம் என்று மும்பையில் தங்கி இருப்பது போல் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் இங்கே நல்ல படங்களும் இயக்குனர்களும் தேடி வந்தால் அதிலும் நான் கவனம் செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார். அதே மாதிரி ஜெயம் ரவிக்கு தற்போது வந்த ஆசை என்னவென்றால் ஜெனிலியா கூட நடிக்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே இவர்கள் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியன் படம் சூப்பர் ஹிட் ஆகி பல குடும்பங்களின் பேவரைட் படமாக இருக்கிறது. அந்த வகையில் ஜெயம் ரவி தற்போது மனம் வெறுத்துப் போன நிலையில் இப்படிப்பட்ட ஒரு கேரக்டருடன் இணைந்து நடந்தால் எனக்கு அதைவிட வேறு சந்தோசம் இருக்க முடியாது என்று அவருடைய ஆசையை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

See also  இலங்கையில் பிறந்தநாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே... வைரலாகும் படங்கள்

அது மட்டும் இல்லாமல் இப்பொழுது வரை ஜெனிலியா மற்றும் ஸ்ரேயா உடன் நட்பு ரீதியாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் எங்களுக்கான ஒரு கதை இருந்தால் நிச்சயம் நாங்கள் ஒன்றாக நடிக்க தயார் என்பதை கூறியிருக்கிறார்.

இந்த பேட்டியை பார்க்கும் இயக்குனர்களில் யாராவது ஒருவர் அப்படி ஒரு கதை இருந்தால் தாராளமாக எங்களிடம் சொல்லலாம். நாங்கள் நடிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று அவருடைய ஆசையை கூறி இருக்கிறார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content