பொழுதுபோக்கு

இழுபறியில் “ஜனநாயகன்” : திரைக்கு வருகிறது “தெறி”

தளபதி விஜய் நடித்து பெரும் வசூல் வேட்டை நடத்திய ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் எப்போது வெளிவரும் என்பது இழுபறி நிலையில் உள்ளது.

குறித்த படத்தைப் பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில், படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், குறித்த படம் வெளியாகுமா, இல்லையா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களை “ர Pரிலிஸ்” செய்ய சில தயாரிப்பாளர்கள் முயன்று வந்தனர்.

இந்நிலையில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு (ஜனவரி 14) செய்வதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.

அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!