இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை! – துணை முதல்வர் சிவக்குமார்

காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை இல்லாததன் காரணமாக, நீர்நிலைகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு நவம்பர் 1ம்தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே காவிரி ஒழுங்காற்று குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்க முடியாது என கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு உத்தரவாக பிறப்பிக்கும். அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு குறிப்பிட்ட தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என்பதே இறுதி உத்தரவாக இருக்கும். காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அளித்துள்ள நிலையில், காவிரியில் நீர் திறப்பது சாத்தியம் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருக்கும் நீர் தங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் எனவே, தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content