உலகம் செய்தி

அக்டோபர் 7 தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவ தளபதிகள் பணிநீக்கம்

இஸ்ரேல்(Israel) இராணுவம் மூன்று தளபதிகளை பணிநீக்கம் செய்வதாகவும், நாட்டின் வரலாற்றில் மிகக் கொடிய தாக்குதலான 2023ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ்(Hamas) நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக பல மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இயல் ஜமீர்(Eyal Zamir) அழைப்பு விடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த பணி நீக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலில் மூன்று பிரிவு தளபதிகள் அடங்குவர், அவர்களில் ஒருவர் 2023ம் ஆண்டு இராணுவ உளவுத்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

வெளியிடப்பட்ட இராணுவ அறிக்கையில், காசா பகுதியில் இருந்து ஹமாஸ் தொடங்கிய தாக்குதலைத் தடுக்க ஆயுதப்படைகள் தவறியதற்கு அவர்கள் தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!