இந்தியா

இஸ்ரேல் தூதர்-நடிகை கங்கனா திடீர் சந்திப்பு…

நடிகை கங்கனா ரணாவத் டெல்லியில் இஸ்ரேல் தூதர் நவர் கிலோனை சந்தித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் நெருக்கடி குறித்து பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவை விரிவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை கங்கனா பகிர்ந்து கொண்டார். மேலும், ஹமாஸை தற்போதைய காலத்தின் ‘ராவணன்’ என்று அழைத்தார். இந்த சந்திப்பு குறித்தானப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா பகிர்ந்திருப்பதாவது, ‘என் இதயம் இஸ்ரேலுக்கு செல்கிறது. இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதருடன் எனது உரையாடல் இங்கே உள்ளது.

நான் இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் எனது ஆதரவைப் பற்றி தெரிவித்தேன். பயங்கரவாதிகளால் படுகொலைகள் தொடங்குவதற்கு முன்பு, நான் குரல் கொடுத்தேன். ஒரு இந்து தேசமாக, பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்து இனப்படுகொலைகள், யூதர்களை நாங்கள் அதிகம் அடையாளம் காண்கிறோம். இந்துக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாரதத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். யூதர்களும் ஒரு தேசத்திற்கு தகுதியானவர்கள்தான். எனக் கூறியுள்ளார்.

Image

மேலும், ‘இன்று முழு உலகமும், குறிப்பாக இஸ்ரேலும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நான் ராவண வதத்திற்காக டெல்லி சென்றபோது, இஸ்ரேல் தூதரகத்திற்கு வந்து இன்றைய நவீன ராவணனையும், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளையும் தோற்கடிக்கும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு குழந்தைகளும் பெண்களும் குறிவைக்கப்படும் விதம் நெஞ்சை பதற வைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது வரவிருக்கும் படமான தேஜாஸ் மற்றும் இந்தியாவின் தன்னம்பிக்கை போர் விமானமான தேஜாஸ் பற்றி விவாதித்தேன்” எனவும் கூறியுள்ளார் கங்கனா.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content