உலகம் செய்தி

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் ஹுசைனி அல் குராஷி இறந்துவிட்டதாக அந்த அமைப்பு உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இட்லிப் மாகாணத்தில் ஹயாத் தாரிர் அல்ஷாம் குழுவுடன் நேரடி மோதலின் பின்னர் ஐஎஸ் தலைவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைவரின் மரணம் குறித்த அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரினால் பதிவு செய்யப்பட்ட டெலிகிராம் பதிவில் உயிரிழந்த திகதி குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு ஹப்ஸ் அல் ஹாஷிமி அல் குராஷி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!