இலங்கை

இலங்கையில் இனக்கலவரம் ஏற்படும் அபாயமா? அமைதி காக்கும் புலனாய்வு பிரிவு

இலங்கையில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இனக்கலவரம் தொடர்பிலும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமிருந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தௌிவூட்டிக்கொண்டிருக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

அரசியல் தூண்டுதல் காரணமாக நாட்டில் இனக்கலவரங்களையும் மோதல்களையும் ஏற்படுத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வது புலனாவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான குழுக்கள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்கமும் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!