இலங்கை

கொழும்பு – கோல்பேஸ் பகுதியில் உள்ள காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

கோல்பேஸ் அகல காணி ( போராட்டம் நடத்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இடம்) எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தை கசினோ வர்த்தகத்திற்கு குத்தகைக்கு விடுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத் தெரிவித்த கருத்து பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (22.02) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் செயற்படும் போது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி நாசப்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க விதிகளுக்கு மாறாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்