செய்தி விளையாட்டு

IPL Match 49 – 190 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். யான்சன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மாத்ரே (7) ஆட்டமிழந்தார்.

சென்னை அணி 11.1 ஓவரில 100 ரன்னைத் தொட்டது. பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஓமர்சாய் பந்தில் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே 15.3 ஓவரில் 150 ரன்னை தொட்டது. 4ஆவது மற்றும் 5ஆவது பந்தை பவுண்டரி விரட்டினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 26 ரன்கள் கிடைத்தது.

சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 17.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். இந்த ஓவரில் துபே ஆட்டமிழக்க சி.எஸ்.கே. 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content