இன்றைய முக்கிய செய்திகள்

ஐரோப்பாவில் ஐபோன் தொடர்பில் அமுலுக்கு வரும் அதிரடி தடை

ஐரோப்பாவில் சில ஐபோன்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 28 ஆம் திகதி முதல் இந்த தடை நடைமுறை அமுலுக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்த விதிமுறைகளுக்கு ஏதுவாக உள்ள இலத்திரனியல் சாதனங்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்பனை செய்ய முடியும்.

தொலைபேசிகள், iPad, AirPods போன்ற கருவிகளில் ’Type C’ முறையில் தயாரிக்கப்பட்ட மின்னேற்றும் பகுதி இருக்கவேண்டும்.

அவை இல்லாத கருவிகள் இவ்வருடம் டிசம்பர் 28 ஆம் திகதியின் பின்னர் விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஐபோன் 14, 14 Plus, 14 Pro, 14 Pro Max போன்ற கருவிகளும் அதற்கு முற்பட்ட தொலைபேசிகளும், முதலாம் தலைமுறை AirPod 2 Pro போன்ற கருவிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்.

விற்பனை நிலையங்களில் குறித்த சாதனங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடத்துக்கு முற்பட்ட ஐபோன் 14 தொலைபேசிக்கு இன்னும் ஆறு வருடங்களுக்கு மென்பொருள் மேம்படுத்த (iOS) முடியும் எனவும், ஆனால் அவை விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன