இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக நாட்டின் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச,ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக சென்றிருந்தனர்.

இதன்போது இளைஞர்கள் மத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை கட்டுவேன் என கூறியதுடன்,

தனது தந்தையைபோல் அரசாங்கத்தின் பணத்தில் அல்லாமல் தனது சொந்த பணத்திலும், நன்கொடையாளர்கள் மூலமாகவும் அதனை செய்து முடிப்பேன் எனவும் கூறினார்.

(Visited 36 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை