இலங்கை

இந்தியா, சீனா தலைமையில் இலங்கைக்காக சர்வதேச மாநாடு!

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின் கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது.

எனவே, இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரசு அமீகரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் இணைத்தலைமையின்கீழ் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்.

உலகில் வேறு நாடொன்றில் அனர்த்தம் ஏற்பட்டு உலகின் பார்வை அந்நாடு பக்கம் திரும்புவதற் முன்னர் இந்த மாநாட்டை நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுகை சங்கம் உட்பட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளின் மாநாட்டையும் நடத்த வேண்டும்.” என்றார் உதய கம்மன்பில.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!