இந்தியா, சீனா தலைமையில் இலங்கைக்காக சர்வதேச மாநாடு!
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின் கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது.
எனவே, இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரசு அமீகரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் இணைத்தலைமையின்கீழ் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்.
உலகில் வேறு நாடொன்றில் அனர்த்தம் ஏற்பட்டு உலகின் பார்வை அந்நாடு பக்கம் திரும்புவதற் முன்னர் இந்த மாநாட்டை நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச செஞ்சிலுகை சங்கம் உட்பட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளின் மாநாட்டையும் நடத்த வேண்டும்.” என்றார் உதய கம்மன்பில.




