இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்ட ஸ்தம்பிதம் தொடர்பில் வெளியான தகவல்

கனேடிய விமான நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலைமை குறித்து கனடா எல்லைச் சேவைகள் முகவரகம் விளக்கம் அளித்துள்ளது.

இணையவெளி தாக்குதல் மூலம் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பக் கோளாறு இல்லை எனவும், வழமையாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்த இந்த கோளாறு வழக்கமான அமைப்பு பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சனை என விளக்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறு சுமார் 48 மணிநேரத்திற்குள் சரி செய்யப்பட்டதாக முகவரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் விமான நிலையங்களில் தன்னியக்கச் சோதனை இயந்திரங்கள் செயலிழந்ததால், அதிகாரிகள் கைமுறையில் பயணிகள் மற்றும் பொதிகளைச் சோதிக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!