இலங்கை

இலங்கையில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது என வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படுவதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் வருடத்திற்கு சுமார் 12,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இந்த இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் போக்குவரத்து விதி மீறல்களால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். தோராயமாக தினம்தோறும் 7-8 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இவ்வருடத்தின் முதல் 08 மாத காலப்பகுதியில் 1427 மரணங்கள் வீதிவிபத்தினால் ஏற்பட்டுள்ளதாவும், பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த 08 மாத காலப்பகுதியில் 600இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், 94 பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்