இலங்கை

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 15 மெகாவாட் காற்றாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) காலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆலையை செப்டெம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்ளூர் பொறியியலாளர்கள் அதன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய, மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிப்பது தனக்கும் பிரச்சினையாகவே உள்ளது.

“நீண்ட கால தீர்வுகளுக்கு செல்ல வேண்டும். மின்சாரத்தை அதிகரிப்பதை விட உற்பத்தி செலவை குறைப்பது எப்படி என்று பார்க்க வேண்டும். முடிந்தவரை சோலார், காற்று போன்றவற்றுக்கு சென்று உற்பத்தி செலவை குறைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்