இலங்கையில் எந்தவொரு மின்சார சபை ஊழியரையும் பணியிடை நீக்கம் செய்ய பணிப்புரை!
சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





