ஆசியா

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

அதற்குள் புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், சிங்கப்பூர் தேர்தல் துறை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அந்த வகையில், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் தேர்தல் துறை பொதுமக்கள் நேற்று முதல் வரும் ஜூன் 28- ஆம் திகதி வரை தேர்தல் துறையின் இணையதளப் பக்கத்தில் அல்லது நேரில் சென்றுப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் தேர்தல் துறையின் என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம். இதற்காக, அவர்கள் சிங்கப்பூர் தேர்தல் துறையில் பதிவுச் செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் https://www.eld.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு பதிவு செய்துக் கொள்ளலாம். அத்துடன், குடியிருப்பு முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களில் தவறு இருப்பின் திருத்தங்களை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 100% வாக்குகள் பதிவாகும் வகையில், அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது தேர்தல் துறை.

 

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!