செய்தி விளையாட்டு

ஐசிசி சம்பியன் கிண்ணம் – இந்திய, பாகிஸ்தான் மோதும் போட்டி

2025 செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள போட்டி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2025 செம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் (Pakistan) நடைபெற உள்ளது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என அறிவித்ததை, அடுத்து கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடக்க உள்ள சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும், அப்போது பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தையும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

விரைவில் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், 2025 சம்பியன் கிண்ண போட்டித் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, 2025 பெப்ரவரி 23ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.

இந்தியா ஆடும் போட்டிகளை தவிர்த்து ஏனைய அணிகள் ஆடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.

இதேவேளை போட்டிகளில் இரண்டு குழுக்களாக நடத்தப்படும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

(Visited 46 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி