பொழுதுபோக்கு

அந்த ஒரு கேள்வியைக் கேட்டு இயக்குநர்களால் அவமதிக்கப்பட்டேன்… நடிகை ஜோதிகா பகிர்ந்த பகீர் தகவல்!

அந்த ஒரு கேள்வியைக் கேட்டு பல இயக்குநர்கள் தன்னை அவமதித்ததாக நடிகை ஜோதிகா பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’36 வயதினிலே’ படத்தில் தனது கம்பேக்கிற்குப் பிறகு நடிகை ஜோதிகா தொடர்ந்து படங்களில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்திருந்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை ஒட்டி ஊடகம் ஒன்றிற்கு பேட்டிக் கொடுத்துள்ளார் ஜோதிகா.

காதல் தி கோர் : விமர்சனம்!

அதில் அவர் பேசியிருப்பதாவது, “சில பெரிய படங்களில் என்னை நடிக்கச் சொல்லி கேட்டார்கள். ஆனால், எனக்கு அந்தப் படங்களில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவமே இல்லை. இந்தக் கதாபாத்திரங்களுக்கு ஏன் என்னை கேட்கிறீர்கள் என்று என்னை சந்திக்க வரும் இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன். நான் இந்த துறையில் 25 வருடங்களாக நடிகையாக பயணித்திருக்கிறேன், என்னிடம் வந்து இரண்டு, மூன்று சீன்கள் இருக்கிறது. அதில் நடித்துக் கொடுங்கள் எனக் கேட்கிறார்கள். அது உண்மையில் எவ்வளவு கேவலமான கேள்வி?

இரண்டு மூன்று சீன்கள் நன்றாக இருந்தால் நானே அந்த படங்களில் நடிப்பேன். நீங்கள் இவ்வளவு தூரம் இவ்வளவு பெரிய படங்களில், என்னை கமிட் செய்ய வருவதற்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால் எனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லையே! ஹீரோவுக்கு அருகில் முக்கியத்துவம் இல்லாத கதையில் நடிக்க என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இடத்தில் நான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன்” என கூறியுள்ளார்.

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!