ஐரோப்பா செய்தி

இலங்கிலாந்தில் வீட்டில் இருந்து இருவர் சடலமாக மீட்பு!!! ஒருவர் கைது

இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை சுமார் 09:55 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், ஒரு ஆணும் பெண்ணும் பல காயங்களுடன் மீட்கப்பட்டனர்

அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மேற்கு யார்க்ஷயர் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பல தீவிர விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என்ன நடந்தது என்பதற்கான சூழ்நிலைகளை நாங்கள் ஆராய்வதால், சம்பவ இடத்திலும், டால்டன் பகுதியில் உள்ள பிற இடங்களிலும் நாங்கள் விரிவான விசாரணைகளை நடத்தி வருகிறோம்,” என்று பொலிசார் கூறியுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content