அனல் கக்கும் தேர்தல் களம்: 21 ஆம் திகதி வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்!
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் திருநங்கை ஒருவரை வேட்பாளராகவும் நிறுத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களம் களமிறங்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பலத்தைக் காட்டும் விதமாக எதிர்வரும் 21-ம் திகதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, சீமான் தனது பிரச்சார போரை ஆரம்பிப்பார்.
200 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பாதியளவு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர்.
குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் சமூக ஆர்வலரான திருநங்கை ரோஷினி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.





