இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – வெளியான காரணம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் அம்பகஹஒய பகுதியில் நேற்று முற்பகல் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பேருந்து விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அத்துடன் 39 பேர் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் 6 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கல் ஒன்று காணப்பட்டமையினால் அதில் பேருந்து மோதியதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(Visited 272 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்