கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் குறித்து கடற்படை விளக்கம்!
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும் இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கச்சதீவு நிலப்பரப்பில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு […]













